ரணிலுடன் பேச்சுவார்த்தை - தமிழ் தரப்புக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை!

Missing Persons Sri Lankan Tamils Ranil Wickremesinghe Government Of Sri Lanka
By Pakirathan May 11, 2023 08:43 AM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்காவின் அதிபர் ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராகும் தமிழ் கட்சிகளுக்கு சில முக்கிய வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வேண்டுகோளினை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்வைத்துள்ளது.

இலங்கை அரசு நீதி வழங்காது 

ரணிலுடன் பேச்சுவார்த்தை - தமிழ் தரப்புக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை! | Main Request For Tamil Parties When Negotiation

2009 இல் யுத்தம் மெளனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கையளிக்கப்பட்ட, சரணடைந்த, கூட்டிச் செல்லப்பட்ட உறவுகளும், வெள்ளை வேன்களிலும், ஆயுத முனைகளிலும் கடத்தப்பட்ட உறவுகளும், சிங்கள அரசாலும், அதன் இராணுவ துணைக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

அவர்களை தேடி 14 வருடங்களாக உறவுகளாகிய நாங்கள் போராடி வருகின்றோம். அதில் எட்டு வருடங்கள் எமது அரசியல் கைதிகளை நம்பி இருந்த காலம்.

அக்காலத்தில் எமது சில தமிழ் அரசியல் தரப்பினரின் ஆதரவுபெற்ற, அவர்களால் நல்லாட்சி என புகழப்பட்ட அரசு இருந்தது.

அப்போதும் கூட எமது அரசியல்வாதிகளால் எமது உறவுகளை மீட்டுத்தர, நீதி பெற்றுத்தர முடியாமல் போய்விட்டது. 2017.02.20 இல் எமது தொடர் போராட்டம் தொடங்கியது.

மைத்திரியுடன் நடைபெற்ற மூன்று சந்திப்புக்களிலும், அவர் எம்மிடம் தந்த வாக்குறுதிகளை மீறியதால் இலங்கை அரசிடம் நீதியை பெற முடியாது என அறிவித்து, சர்வதேசத்தை நோக்கி எமது போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

பேச்சுவார்த்தை - நாடகம் 

ரணிலுடன் பேச்சுவார்த்தை - தமிழ் தரப்புக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை! | Main Request For Tamil Parties When Negotiation

இலங்கை அரசு அனுசரணை வழங்கிய 40/1 தீர்மானத்திற்கு எவ்வித முன்னேற்றமும் இன்றி காலத்தை இழுத்தடித்த போதும், இலங்கை அரசுக்கு மேலும் காலநீடிப்பு வழங்கும்படி எமது தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச நாடுகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நாம் கால நீடிப்புக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கேட்டிருந்தோம். அதையும் மீறி காலா நீடிப்புக்கு செயல்படுத்த முடிவெடுத்த எமது அரசியல்வாதிகள், எமது துயரத்தையும், வலியையும், இழப்பையும் பொருட்படுத்தவே இல்லை.

மீண்டும் இப்போது சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக சிறிலங்ககா அரசினால் ஆடப்படும் பேச்சுவார்த்தை எனும் நாடகத்தில் பங்கேற்க இருக்கும் அரசியல்வாதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பாகவும் கதைக்கவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

உள்ளூர் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து சர்வதேச நீதி ஒன்றே எமக்கு தீர்வை பெற்றுத்தரும் என தெளிவான முடிவுடன் போராடும் எமது வலிகளை மீண்டும் உங்களின் சுயலாப அரசியலுக்காக சிறிலங்கா அரசிடம் அடகு வைக்காதீர்கள்.

 உங்கள் நலனுக்காக எமது கண்ணீர்களுக்கு சிங்கள அரசிடம் நீங்கள் விலை போகாதீர்கள்.

முக்கிய கோரிக்கை

ரணிலுடன் பேச்சுவார்த்தை - தமிழ் தரப்புக்கு முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை! | Main Request For Tamil Parties When Negotiation

உண்மையில் நீங்கள் இதய சுத்தியுடன் தமிழ் மக்களின் நலன் கருதியே பேச்சுவார்த்தைக்கு செல்வதாக இருந்தால் முதலில்,

"எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு காரணமான சிங்கள இராணுவத்தை எமது தாயகமான வடக்கு கிழக்கில் இருந்து வெளியேருவதற்கு சிறிலங்கா அரசை இணங்கச் செய்யுங்கள்.

எமது உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகளில் சிறிலங்கா அரசின் ததலயீடு / அச்சுறுத்தல்கள் இருக்காது என்ற உறுதிப்பாட்டினை பெறுதல்.

எமது தாயகமான வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள, பெளத்த மயமாக்களை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டினை பெறுதல்." போன்ற கோரிக்கைகளை வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்வைத்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022