மொசாட்டின் புதிய பணிப்பாளராக தனது நெருங்கிய கூட்டாளியை நியமித்தார் நெதன்யாகு
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இராணுவச் செயலாளராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ரோமன் கோஃப்மேன், மொசாட் உளவு அமைப்பின் அடுத்த பணிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நியமனம் ஜூன் 2 அன்று செய்யப்படும் என்றும், இது 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆஷர் க்ரூனிஸ் தலைமையிலான மூத்த நியமனங்கள் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பெலாரஸில் பிறந்தவர்
ஜூன் மாதம் ஓய்வுபெறும் தற்போதைய மொசாட் தலைவர் டேவிட் பார்னியாவிற்குப் பதிலாக கோஃப்மேன் பதவியேற்பார்.

பெலாரஸில் பிறந்த கோஃப்மேன், 1990-ல் தனது 14-வது வயதில் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தார். ஒக்டோபர் 7, 2023 அன்று நடந்த ஹமாஸ் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவர் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார். மேலும், ஹமாஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு காசா பகுதியில் இராணுவ ஆட்சி தொடர வேண்டும் என்றும் அவர் முன்பு பரிந்துரைத்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |