இலங்கையருக்கு கதவடைத்தது மலேசியா
srilanka
people
malaysia
band
By Sumithiran
இலங்கையர்களை இன்று சனிக்கிழமை முதல் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்தது மலேசியா. இந்த தகவலை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தடைக்குள் இலங்கையுடன் சேர்த்து பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நாடுகளில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றே இந்த தடைக்கான காரணமாகும்.
நீண்டகால சமுக வருகை பாஸ், வணிக பாஸ், மற்றும் சமுக பாஸ் வைத்திருப்பவர்களுக்கு இந்த தடை பொருந்தும் என சிரேஷ்ட அமைச்சர் இஸ்மாயில் யாகூப் தெரிவித்தார். எனினும் வியன்னா மாநாட்டின் கீழ் இராஜதந்திர பாஸ் வைத்திருப்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இலங்கையில் இருந்து வருவதற்கு முன்பு இத்தாலி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.