மாலைதீவு பிரஜைக்கு ஆயுள் தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றம்!
Srilanka
arrested
heroin
life sentence
Maldivian man
By MKkamshan
மாலைதீவு பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. 265 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்துக்காக லத்தீப் இஷூன் என்பவருக்கே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கினை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தண்டனையை விதித்துள்ளார். மேலும், மேற்படி நபருடன் கைதான மற்றுமொரு சந்தேகநபரை நிரபராதியாக கருதி விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்