வட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் விற்பனை - முன்னாள் இராணுவ சிப்பாய் கைது
பண்டாரவளை (Bandarawela) நகரில் வட்ஸ்அப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய பக்கட்களை கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை காவல் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிமடை - அம்பகஸ்தோவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதான போதைப்பொருள் வியாபாரி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்இ பண்டாரவளை நகரிலுள்ள இந்த வாடகை வீட்டில் பண்டாரவளை காவல் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன்போது சந்தேக நபர் ஹெரோயினை சிறிய பக்கட்களில் பொதி செய்து கொள்வனவு செய்பவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும் அதன் போதே கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

