ஆபத்தான ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது! விசாரணைகள் தீவிரம்
கம்பஹா- யக்கல பகுதியில் 02 வெடிக்காத கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான வெடிக்காத தோட்டாக்கள் அடங்கிய கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு (16) யக்கல காவல்துறை பிரிவில் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
அதன்படி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 வெடிக்காத கையெறி குண்டுகள், 32 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், எம்-16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டா மகசின், அதுபோன்ற 11 தோட்டாக்கள், 06 சுழல் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 34,000 சிகரெட்டுகள் ஆகியவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |