எரிபொருளுக்கான கியூஆர் முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்கான கியூஆர் (QR) முறையை உடனடியாக நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே அறிவித்துள்ளார்.
அதன்போது, உலகளாவிய எரிபொருள் சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையின்மையின் காரணமாக இந்த திட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் விலை உயர்வு
மேலும், கியூஆர் முறையின் பயன்பாடு எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு இரண்டையும் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய நெத்திகுமரகே, போர்ச் சூழல் மீண்டும் மோசமடைந்தால் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையைத் தடுக்கவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் கியூஆர் முறையைத் தொடர்ந்து பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், போர்ச் சூழல் மீண்டும் உருவானதால் நாட்டின் எரிபொருள் விநியோக வலையமைப்பு பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விலையில் மீண்டும் உயர்வு ஏற்படுமா என்பதை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |