இளைஞன் அடித்துக் கொலை - 16 வயது சிறார்கள் உட்பட அறுவர் கைது
வெலிகம, கலகந்த பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை அடித்துக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களும் அடங்குவதாக வெலிகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம்

வீதியோரத்தில் இருந்த பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நண்பர்கள் குழுவுடன் விருந்தில் கலந்து கொண்ட பின்னர் பாதிக்கப்பட்ட நபர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணின் இரண்டு மகன்கள் உட்பட ஒரு குழு பின்னர் அந்த இளைஞனைக் கொடூரமாகத் தாக்கி கொன்றுள்ளது.
பெண்ணின் இரண்டு மகன்களும் கைது

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணின் இரண்டு மகன்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 16, 21, 23 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.