யாழில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்ட நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த நல்லையா இராசலிங்கம் (வயது 77) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
போதனா வைத்தியசாலை
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த முதியவர் கடந்த நான்காம் திகதி மதுபோதையில் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.
பின்னர் அவரது மனைவி ஐந்தாம் திகதி அதிகாலை அவரை எழுப்பியுள்ளார்.
அவர் மயக்கம் அடைந்து காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மரண விசாரணை
தொடர்ந்து மயக்க நிலையிலேயே காணப்பட்ட குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மருத்துவ வில்லைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
