வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர் வீதியில் மரணம்! தீவிர விசாரணையில் காவல்துறை
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By pavan
திஸ்ஸமஹாராம, கல்கனு சந்தி பிரதேசத்தில் காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த ஒருவரை காவல்துறையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அந்த நபர் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் உடனடியாக அந்த நபரை திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
திஸ்ஸமஹராம மஹசேன்புர பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இவர் கடந்த 28 ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் நேற்று (29) அதிகாலை அனுமதியின்றி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம காவல்துறையினர் மேலதிக விசாரணைளை நடத்தி வருகின்றனர்.