தமிழர் பகுதியில் 21 வயது இளைஞர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
தமிழர் பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
உயிரிழந்தவரின் தந்தை
கொழும்பிலிருந்து வருகை தந்து அக்கரைப்பற்றுக்கு செல்லவிருந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று இரவு 11:00 மணி வரை தங்களுடன் தொடர்பில் இருந்தவர், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினரும், தடயவியல் பிரிவு காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்