யாழில் இ.போ.ச நடத்துநரை போதையில் தாக்கிய இளைஞன் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Theepan
மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துநரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில், நிறை போதையில் மிதிபலகையில் நின்று பயணித்தவரை நடத்துநர் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார்.
விசாரணை
அதனால் நடத்துனரும், மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டதில் , இளைஞன் நடத்துநரை தாக்கியுள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினரிடம் இளைஞனை ஒப்படைத்தனர்.
இளைஞனை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்