வர்த்தகர் கொலை! கையும் களவுமாக சிக்கிய கொலையாளி: வெளியாகிய பின்னணி
குருநாகலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரை கொலை செய்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கமராக்கள் மூலம் கிடைத்த காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (01) குருநாகல் புத்தளம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தும் இடம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட பொருட்கள்
பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் சந்தேகநபரின் பணியிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட தங்க நகையும் சந்தேகநபர் பணிபுரியும் பணியிடத்தில் உள்ள குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர் இன்று (02) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குருநாகல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.