தலைமன்னாரில் கோர விபத்து- நீதிகோரும் போராட்டம்!
தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேருந்து புகையிரதத்துடன் மோதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று திங்கட்கிழமை காலை தலைமன்னார் பியர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சர்வமத தலைவர்கள் அரசியல் பிரதி நிதிகள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேருந்தும் புகையிரதமும் மேதி எற்பட்ட விபத்தில் தலை மன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வந்த பாலச்சந்திரன் தருண் வயது-14 என்ற மாணவன் உயிரிழந்ததோடு, மாணவர்கள் பொது மக்கள் என 25 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விபத்திற்கு நீதி கோரி இன்று காலை 7.45 மணியளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமானது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவை வரை பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இதன் போது போராட்டம் இடம் பெற்ற பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் , புகையிரத திணைக்கள அதிகாரி ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர். இதன் போது பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.
குறிப்பாக புகையிரத கடவைக்கான தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்க கோரியும் அத்துடன் வயோதிபர் இல்லாமல் நடுத்தர வயதுடையவர்களை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும், குறித்த புகையிரத கடவையை பொலிஸார் தொடர்சியாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்தனர்.
இதன் போது குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்