மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று (02) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி கோரிய நிலையில் மன்னார் நீதவான் குறித்த அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பில் சட்டத்தரணி எஸ்.டினேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
மேலும் தெரிவித்துள்ள அவர், “மன்னார் நீதி மன்றத்திற்கு முன் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு B-9125 என்ற வழக்கில் முற்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, குறித்த சந்தேக நபர் மன்னார் காவல்துறையினரால் முருங்கன் காவல் நிலையத்தில் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னணியில் குறித்த அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே குறித்த வழக்கினை குற்ற விசாரணைப் பிரிவினர் கையாண்டு வந்தனர்.
இதனடிப்படையில், அடம்பன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் குறித்த சந்தேக நபரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முற் படுத்தப்பட்டு ஏற்கனவே 72 மணித்தியாளங்கள் கொழும்பில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உற்படுத்தி குறித்த 72 மணித்தியாலங்கள் வெள்ளிக்கிழமை (02) மதியம் ஒஐ மணியுடன் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் சி.ஐ.டி யினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அனுமதிக்கு ஆட்சேபனை
இதையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதால் குறித்த சந்தேக நபரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்றில் அனுமதி கோரப்பட்டது.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரிவு ஒன்பதின் கீழ் சந்தேக நபர் ஒருவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

இருப்பினும், சி.ஐ.டி யினருக்கு மதியம் ஒரு மணிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில் குறித்த அனுமதிக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடம் இருந்து தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் சி.ஐ.டி யினர் நகர்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை 90 நாட்கள் சி.ஐ.டி யினர் விசாரணைக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 21 மணி நேரம் முன்