மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!
hospital
mannar
blood bank
By Kalaimathy
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குருதி வழங்க முன்வருபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர்பதிராஜா அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், குருதி வழங்க விரும்புபவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் அல்லது 023-2222261, மற்றும் 023-2222349 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி குருதி வழங்க முடியும் என மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர்பதிராஜா மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்