இலங்கையின் மொத்த கடனையும் அடைக்கத் தயாராகும் மன்னார்
மன்னார் மாவட்டத்தில் மறைந்துள்ள கனிய மற்றும் எரிபொருள் வளங்களை சரியான முறையில் முகாமை செய்தால் அதிக இலாபத்தை இலங்கை அடையலாம் எனவும், அவற்றைப் பயன்படுத்தி நாட்டின் மொத்த கடன் சுமையையும் செலுத்திவிடலாம் எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த எரிசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இதனைக்குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
267 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிய வளமும், எரிபொருள் வளமும் உள்ளது.அவற்றை சரியான முறையில் முகாமை செய்யும்பட்சத்தில் அதிக இலாபத்தை இலங்கை அடையலாம்.
எரிபொருள் மற்றும் கனிய வளங்களில் 50 வீதத்தை தனியார் துறைக்கு கொடுத்தாலும் அரசாங்கத்திற்கு 133.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.