‘வெல்டன் அநுர’ : ஜனாதிபதியை பாராட்டும் மனோகணேசன்
சம்பவம் செய்த சிறைச்சாலை ஆணையாளரை பதவி நீக்கி, அநுர சிறப்பான சம்பவம் செய்துள்ளார். பாராட்டுகள்!என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்(mano ganeshan) தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவில் இந்த பாராட்டை அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கைதிகள் விடுவிப்பு தொடர்பில் இரண்டு விஷயங்கள்
“ஜனாதிபதி மன்னிப்பு” பட்டியலுக்கு புறம்பாக, கைதிகள் விடுவிக்கப்படுவது தொடர்பில் இரண்டு விஷயங்கள் உள்ளன.
இது தனியொரு ஆணையாளரால் மாத்திரம் செய்யக் கூடிய சம்பவம் அல்ல. இதற்கு பின் நிச்சயமாக பலர் உள்ளார்கள்.
இது முதல் சம்பவமாக இருக்க முடியாது
தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, விசாரணை, குற்றப் பத்திரிக்கை, வழக்கு, சிறைத் தண்டனை என்ற பாதையில் பயணிக்க வைக்கப்பட வேண்டும்.
இது நிச்சயமாக முதல் சம்பவமாக இருக்க முடியாது. இதற்கு முன்னைய ஆட்சிக் காலங்களிலும், நடந்த இத்தகைய “விடுவிப்பு” சம்பவ வரலாறுகள் தோண்டி எடுக்கப்பட்டு சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
