மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய இனந்தெரியாத ஆணின் சடலம்
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
By Bavan
மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாங்கேணிக்கும் கிரிமிச்சைக்கும் இடைப்பட்ட (கயூவத்தை) கடற்கரையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாங்கேணிக்கும் கிரிமிச்சைக்கும் இடைப்பட்ட கடற்கரையில் நேற்று (06/12)பகல் கரை ஒதுங்கிய இந்த சடலம் அடையாளம் காணமுடியாமல் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைப்பு
சடலம்கரை ஒதுங்கியதை கண்ட மக்கள் வாகரை காவல்தறைக்கு தகவல் வழங்கியதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் நேற்று மாலை வாகரை காவல்துறையினரால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் காவல்துறையினர் மற்றும் திடீர் மரண விசரன அதிகாரி பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி