இன்று மலையகத்தில் பல தொடருந்து சேவைகள் இரத்து!
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு தபால் தொடருந்து சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
மேலும், முற்பகல் 9.45 மணிக்கு பதுளை நோக்கி கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணிக்கவிருந்த தொடருந்து சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக இன்று கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கவிருந்த தொடருந்தும், பிற்பகல் 12.40 மணிக்கு ஹட்டன் நோக்கி பயணிக்கவிருந்த தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
ஒன்றரை மணிநேர தாமதம்
கனேவத்த மற்றும் நாகொல்லாகம இடையிலான தொடருந்து பாதையில் மரமொன்றும், மின்கம்பிகளும் அறுந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அனுராதபுரத்திலிருந்து மாத்தறை நோக்கி பயணிக்கவிருந்த “ரஜரட்ட ருஜின” தொடருந்து ஒன்றரை மணிநேர தாமதத்திற்கு பின்னரே பயணித்ததாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடும் மழை காரணமாக கண்டி தொடருந்து நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அனைத்து கடமைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
