ஐ.நா இலங்கை வதிவிட பிரதிநிதியுடன் மௌலவி சுப்யான் சந்திப்பு!
யாழ்பாணத்தில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அண்ட் பிரென்ச்(Marc-André Franche)உள்ளிட்ட குழுவினருடன் மக்கள் பணிமனை தலைவரும் மக்கள் மறுமலர்ச்சி முன்னணி பிரதி தலைவருமான மௌலவி B.A.S சுபியானுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, நேற்றையதினம்(7)IOM அலுவலகத்தில் இடம்பெறறுள்ளது. இச்சந்திப்பின் போது , வடக்கு முஸ்லிம்கள் குறிப்பாக புத்தளம் மற்றும் யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகள், புறக்கணிப்புகள் ,சவால்கள் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.
அதாவது, வடக்கு முஸ்லிம்களின் 1990 ஒக்டோபர் இன சுத்திகரிப்பு, தேசிய சர்வதேச ரீதியில் இலங்கை இன பிரச்சனை தீர்வு தொடர்பான அரசியல் கலந்துரையாடலில் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படாமை,
யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்கள்
1998 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட (Guiding principles of international displacement) உள்நாட்டில் இடம்பெயர்ந்தமை பற்றி வழிகாட்டும் கொள்கைக்கிணங்க அரசும் சர்வதேசமும் வடக்கு முஸ்லிம்களை பராமரிக்காமை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குழுவினால் (L.L.R.C) வடக்கு முஸ்லிம்கள் தொடர்கள் முன்வைக்கப்பட்ட ஆலோசனை நடைமுறைப்படுத்தப்படாமை,

2015 ஆம் ஆண்டில் UN இல் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான நிலைமாறும் நீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் வடக்கு முஸ்லிம்கள் மீது கவனம் செலுத்தப்படாமை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் யுத்தம் முடிவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் யாழ்ப்பாணத்தில் மீள குடியேறியுள்ள மீள்குடியேற்றத்திற்காக பதிந்துள்ள மொத்தத்தில் 3000 குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து அவற்றினை வழங்கி மீழ்குடியேற்ற முடியாத அல்லது மறுக்கும் அரசு நிர்வாகத்தினால் யாழ் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் இருக்கின்றன எனவும் புலிகளினால் கடத்தப்பட்ட 49 யாழ் முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது ?
யாழ்ப்பாணம் முஸ்லிம்கள்
என்பது இதுவரை தெரியவில்லை என்ற விடயமும் அவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் அவரிடம் யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு அரசியல் பலம் இல்லாதது ஒரு பலவீனமாகும் என்பதுடன் பெரிய அளவில் வாக்கு வாங்கி எம்மிடத்தில் இல்லாத காரணத்தினால் எமக்காக குரல் கொடுக்க உதவ அரசியல் கட்சிகளும் தலைமைகளும் பெரிய அளவில் அக்கறை காட்டுவதில்லை.

மேலும் வட மாகாண முஸ்லிம்களில் 35%மானவர்களே பல சவால்களுக்கு மத்தியில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறி உள்ளனர் மிகுதியில் 65% சதவீதமானோர் புத்தளம், கம்பஹா ,கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.
என்றும் புத்தளத்திலேயே அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தாங்கள் புத்தளத்திற்கும் நேரடியாக வந்து அந்த மக்களை சந்தித்து உரையாடி அவர்களது கவலைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் பிரச்சினை
என்றும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினையை தொடர்பாக UN இல் விசேஷ கவனம் செலுத்துவதுடன் எமக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் மௌலவி கேட்டுக்கொண்டார்.

அத்துடன் உரையாடிய விடயங்கள் தொடர்பில் பல்வேறு ஆவணங்களும் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அண்ட் பிரென்சிடம் கையளிக்கப்பட்டன .
மார்க் அண்ட் பிரென்ச் பதிலளிக்கையில், வடக்கு முஸ்லிம்கள் பற்றி தன்னுடன் யாரும் பேசவில்லை .ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர் .
UN தலைமையகம்
இன்று உங்களிடமிருந்து தான் அவர்களைப் பற்றி பெருமளவிலான விடயங்களை தெரிந்து கொண்டேன் .இதற்காக நன்றிகள் . இச்சந்திப்பு இவ்வளவு பயனுள்ளதாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும் பல்வேறு தரவுகள் தகவல்களை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள்.

தற்போது என்னிடம் ஒப்படைத்துள்ளீர்கள். ஆதாரத்துக்கு படமும் எடுத்துள்ளீர்கள். நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு வடக்கு முஸ்லிம்களின் அபிலாசைகள், பிரச்சினைகள் UN தலைமையகத்திற்கு முன்வைப்பேன். நமது சந்திப்புகள் மேலும் தொடர வேண்டும் .என்னுடன் தொடர்புடன் இருந்து கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |