அச்சுறுத்தும் சுன்னாகம் காவல்துறை : அச்சத்துடன் சாட்சியமளிப்போர்

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna
By Sumithiran May 13, 2024 07:30 PM GMT
Report

 யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கடந்த 10ஆம் திகதி காவல்துறையினரால் உதைத்து வீழ்த்தி உயிரிழந்ததாக கூறப்படும் விபத்து சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு சுன்னாகம் காவல்துறையினர் அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் என்பவர் கடந்த 10 ஆம் திகதி காவல்துறையினரால் வழிமறித்து அவர் நிற்காத நிலையில், துரத்திச் சென்ற காவல்துறையினர் அவரது மோட்டார் சைக்கிளை காலால் உதைத்ததில் அவர் வீதியில் வீழ்ந்து தலையில் பலத்த காயத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் வயாவிளான் பகுதியில் இடம்பெற்றது.

தனது காணியில் வேலைசெய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மின்சார சபை ஊழியரை வயாவிளான் பகுதியில் இரண்டு காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். மின்சார சபை ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் அவ்விடத்தில் நில்லாது உரும்பிராய் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களுக்கு துக்க தினத்தை அனுஷ்டிக்க கூட உரிமை இல்லை...!

இலங்கையில் தமிழர்களுக்கு துக்க தினத்தை அனுஷ்டிக்க கூட உரிமை இல்லை...!

காலால் உதைந்து

இதன்போது தாம் மறித்து நிற்கவில்லை என கருதிய காவல்துறையினர் இருவர் அவரை பின்னால் துரத்தி சென்றுள்ளனர். வேகமாக துரத்திச் சென்ற அவர்கள் உரும்பிராய் சந்திக்கு அருகில் இருக்கின்ற ஆயக்கடவை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் காலால் உதைந்துள்ளனர்.

அச்சுறுத்தும் சுன்னாகம் காவல்துறை : அச்சத்துடன் சாட்சியமளிப்போர் | Menacing Sunnagam Police Witnesses Fear

மோட்டார் சைக்கிளுக்கு காலால் உதைந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மின்சார சபை ஊழியர் சம்பவ இடத்தில் பலத்த காயங்களுக்குள்ளானார். இதனை வீதியால் பயணித்த பொதுமக்கள் சிலர் நேரில் கண்டு ஆத்திரம் அடைந்து காவல்துறையிடம் நீதி கேட்டு தாக்க முற்பட்டுள்ளனர்.

ரஷ்ய,உக்ரைன் கூலிப்படையிடம் சிக்கிய மற்றுமொரு இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ரஷ்ய,உக்ரைன் கூலிப்படையிடம் சிக்கிய மற்றுமொரு இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

எந்தவித முயற்சியும் செய்யாத  காவல்துறை

எனினும் காயமடைந்தவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் எந்தவித முயற்சியும் செய்யாத நிலையில் வீதியிலுள்ள பொதுமக்கள் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் அதற்கு அனுமதிக்காத காவல்துறையினர் நோயாளர் காவு வண்டி வரும் வரை எவரும் அருகில் செல்ல வேண்டாம் எனக் கூறி 15 நிமிடங்களுக்கு மேலாக அவரை நெருங்கவிடாது தடுத்துள்ளனர்.

அச்சுறுத்தும் சுன்னாகம் காவல்துறை : அச்சத்துடன் சாட்சியமளிப்போர் | Menacing Sunnagam Police Witnesses Fear

இறுதியில் காவல்துறையினருடன் முரண்பட்ட இளைஞர்கள், முச்சக்கர வண்டி ஒன்றில் காயமடைந்தவரை ஏற்றி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இருப்பினும் அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வழிமறித்த இரண்டு காவல்துறையினரும் நிறைபோதையில் அவ்விடத்தில் நின்றதாகவும் அப்பகுதியில் பயணித்த பொதுமக்கள் அன்றிரவு ஊடகவியலாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு..!

சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு..!

இது தொடர்பாக இரண்டு காவல்துறையினரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும் அவர்கள் மதுபானம் எதனையும் பாவிக்கவில்லை என சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணால் கண்ட சாட்சியங்கள் நீதிமன்றத்தில்

இந்நிலையில் காவல்துறையினர்தான் மின்சார சபை ஊழியரை தூரத்திச் சென்று காலால் உதைந்து அவரை விபத்துக்குள்ளாக்கினார்கள் என்பதை கண்ணால் கண்ட சாட்சியங்கள் தாம் நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறி வரும் நிலையிலேயே சுன்னாகம் காவல்துறையினர் தற்போது அப்பகுதிக்குச் சென்று இந்த சம்பவம் தொடர்பில் யார் யார் பார்த்தார்கள் இது தொடர்பில் யார் சாட்சியம் சொல்லப் போகிறார்கள் போன்ற விடயங்களை திரட்டி குறித்த நபர்களை தொலைபேசி ஊடாகவும் நேரில் சென்றும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அச்சுறுத்தும் சுன்னாகம் காவல்துறை : அச்சத்துடன் சாட்சியமளிப்போர் | Menacing Sunnagam Police Witnesses Fear

வீதிப்போக்குவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுபவர்களை போல் அல்லாது போதையை பாவித்து விட்டு அவ்விடத்திலிருந்து மின்சார சபை ஊழியரை வழி மறித்து துரத்திச் சென்று அவரை காலால் உதைந்து மரணத்தை ஏற்படுத்தியதாகவும் நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் எனவே இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுப்பதற்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

19 Mar, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025