மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீரவிற்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
மேர்வின் சில்வா(mervyn silva), பிரசன்ன ரணவீர(prasanna ranaweera) உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர மற்றும் இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (26) மஹர நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
அரசுக்கு சொந்தமான நிலம் மோசடியாக விற்பனை
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலம் போலியான பத்திரங்களைப் பயன்படுத்தி விற்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மஹர மாஜிஸ்திரேட் காஞ்சனா சில்வா முன் இணையவழியில் விசாரணைக்கு வந்தது.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த மஹர நீதவான் காஞ்சனா என். சில்வா, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் ஜூன் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் பிரசன்ன ரணவீர சமர்ப்பித்த பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
