மெக்ஸிகோவில் ஏற்பட்ட கோரம்! 13 பேர் உயிரிழப்பு
Death
Accident
People
Mexico
By Chanakyan
மெக்ஸிகோவின் தலைநகரில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்ததில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் செவ்வாயன்று மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ நகர அரசாங்கத்தின் செயலாளர் அல்போன்சோ சுரேஸ் டெல் ரியல் மிலெனியோ மேலும் தெரிவித்துள்ளார்.