புலம்பெயர் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இங்கிலாந்தில், உள்துறைச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர் சிறுவர்கள் மூவர் கடத்திச் செல்லப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்திலுள்ள பிரைட்டன் என்ற இடத்தில், உள்துறைச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதி ஒன்றில் பெற்றோர் இல்லாமல் தனியாக வந்த புகலிடக்கோரிக்கையாள சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த மே மாதம், அந்த விடுதியில் முன்பு மகிழுந்து ஒன்று வந்து நிற்பதையும், மூன்று பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு மகிழுந்து அங்கிருந்து விரைந்ததையும் கவனித்த ஒருவர், அந்த மகிழுந்தின் இலக்க தகட்டிலிருந்த எண்ணைக் கவனித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
தனியாக வரும் புகலிடக்கோரிக்கையாளர்
இதனையடுத்து உடனடியாக அந்த மகிழுந்தை சுற்றி வளைத்த காவல்துறையினர், அந்த மூன்று பிள்ளைகளையும் மீட்டதுடன், மகிழுந்திலிருந்த கடத்தல்காரர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்தப் பிள்ளைகள் காப்பாற்றப்பட்டாலும் இது போன்ற கடத்தல்களில் சிக்கும் பிள்ளைகள், காவல்துறையினர் மீதான பயத்தால் காவல்துறையினருக்கு தகவலளிப்பது இல்லை.
இதனால் இப்படி பெற்றோர் இல்லாமல் தனியாக வரும் புகலிடக்கோரிக்கையாளர் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு அபாயம் நிலவுகிறதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.