அதிபர் போட்டியில் இருந்து விலகுகிறார் மைக் பென்ஸ்
அடுத்த ஆண்டு (2024) அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இருந்து குடியரசுக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மைக் பென்ஸ் அதிபர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் மரபுப்படி அங்குள்ள இரு கட்சிகளில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது, அதிபராக ஜோ பைடன் விளங்குகிறார்.
இது எனது நேரம் அல்ல
மேலும் இப்போது, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் பலரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் போட்டியில் இறங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், முன்னாள் அதிபர் டொனல்ட் ட்ரம்ப் போட்டியிட இருப்பதாக கூறியிருந்த நிலையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் மைக் பென்சும் போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து மைக் பென்ஸ் விலகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

லொஸ் வேகாசில் நடந்த குடியரசுக் கட்சியின் யூதக் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, "நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அதிபர் போட்டிக்கான எனது பிரசசாரத்தை இன்றுடன் நிறுத்த முடிவு செய்துள்ளேன். எனக்கு இது தெளிவாகிவிட்டது, இது எனது நேரம் அல்ல" என்று பென்ஸ் தெரிவித்துள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்