அமைச்சர் டக்ளஸைக் கண்டதும் பின்பக்கத்தால் ஓடிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! (படங்கள்)
யாழ் மாவட்ட மீனவர்களினால் இன்றைய தினம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை நிறுத்த கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் வீதிமறியல் போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோருடன் அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் நாள் முன்னெடுக்கப்பட்ட முடக்க போராட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதனை அவதானித்த கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றுள்ளனர்.
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.