சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை - நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ள நீதி அமைச்சர்
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில், நாடாளுமன்றத்தில் விரிவான உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையால், அலுவலக கட்டடம், ஆவணக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், எந்தவித ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள முடியாது போயுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேரும் சிறைக்கைதிகள் 19 பேருமாக மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |