அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka Politician
Sri Lanka
Water
By Shalini Balachandran
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை (National Water Supply and Drainage Board) தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இவ்வாறு அறவிடப்படாது நிலுவையில் உள்ள தொகை ஒன்பது மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
பொதுவிதிகளுக்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி