ஊடகவியலாளர்களுக்கான புலமைபரிசில் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
ஊடகவியலாளர்களுக்கான புலமைபரிசில் திட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல் ஒன்றினை ஊடக அமைச்சு வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான “அசிடிசி ஜர்னலிசம் ஸ்காலர்ஷிப்” திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஊடக அமைச்சு கோரியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் நோக்கம் இலங்கையில் ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிப்பதே என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள்
அவ்வகையில், இந்த ஆண்டு விண்ணப்பிப்பதற்கான கடைசி திகதி ஒக்டோபர் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை திட்டத்தில் இருந்து இரண்டு முறை பயனடைய ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் முதல் புலமைப்பரிசில் வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் இரண்டாவது வாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
புலமைப்பரிசில் திட்டமானது இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாயும் (ரூ. 200,000/=) நீண்ட மற்றும் குறுகிய கால சான்றிதழ் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாயும் (ரூ. 100,000/=) வழங்க தீர்மானித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11