அவசர உதவிக்கு 117 எண்ணை அழைக்கவும்! இடர்முகாமைத்துவ மையம் அவசர அறிவிப்பு
மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகப் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என இடர்முகாமைத்துவ மையம் (DMC) எச்சரித்துள்ளது.
பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவசர இடர் நிலைமைகள் ஏதேனும் ஏற்படின், இடர்முகாமைத்துவ மையத்தின் அவசர உதவி இலக்கமான 117 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம்
இதனடிப்படையில் இன்று (03) பிற்பகல் 3:00 மணி முதல் கொத்மலை நீர்த்தேக்கம் (Kotmale Reservoir) வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதால், மஹாவலி கங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடர்முகாமைத்துவ மையத்தின் தரவுகளின்படி பின்வரும் பிரதேசங்கள் சிறிய வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன:
- உடுநுவர (Udunuwara)
- உடபலாத (Udapalatha)
- யடிநுவர (Yatinuwara)
- கங்கா இஹள கோரளை (Ganga Ihala Korale)
- பஸ்பாகே கோரளை (Pasbage Korale)
- கங்கவட்ட கோரளை (Gangawata Korale)

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு முப்படைகள் மற்றும் காவல்துறையினர் அவசர பாதுகாப்புப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேவைப்படின் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது உள்ளிட்ட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |