சீனாவினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து! சிறிலங்கா தான் பலிக்கடாவா?? (காணொளி)
வடக்கிலுள்ள பிரதான மூன்று தீவுகளை மின்னுற்பத்திக்காக சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் கையளிததிருந்தது. இந்த விடயம் பெரும் பூதாகர பிரச்சினையை கிளப்பவே அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு பின்வாங்கியது சீனாவும் சிறிலங்கா அரசாங்கமும்.
இந்த பிரச்சினை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சறுத்தல் என கூறி உடனடியாகவே இந்தியாக் குழுவினர் சிறிலங்கா விரைந்தனர். சிறிலங்கா மீது இந்தியா பெரும் அழுத்ததினை பிரயோகிக்கவே குறித்த திட்டம் கைவிடப்பட்டது.
இது சற்று ஒய்வு நிலைக்கு செல்லவே மீண்டும் கிளம்பிது வேறொரு பூதம். சிறிலங்காவிற்கான சீனத்தூதுவர் வடக்கிற்கு விரைந்த விடயம், தீவுகளை பார்வையிட்டமை மற்றும் இந்தியாவினை இணைக்கும் இராமர் பாலத்தினைப் பார்வையிட்டமை என வேறொரு ரூபத்தில் வெடித்தது புதிய சர்ச்சை,
மீண்டும் சீனாவினால் இந்தியாவிற்கும், இந்திய தேசியப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையுமா? இதற்கு சிறிலங்கா தான் பலிக்கடாவா?
இது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய “மெய்மை” நிகழ்ச்சி,