வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தடவியல் காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மேலதிக விடயங்களை தெரிவிக்க முடியுமென காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, இவர், கடந்த சனிக்கிழமை (25) காலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையில் ,காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் (27) மாலை வவுனியா காவல் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
