வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

Missing Persons Sri Lankan Tamils Geneva Eastern Province Northern Province of Sri Lanka
By Sathangani Aug 31, 2025 09:04 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜெனீவாவில் அமைந்துள்ள மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் நேற்று (30) குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2025 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சர்வதேச தினத்தில் சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

சர்ச்சையாகியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சரின் புகைப்படம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

சர்ச்சையாகியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சரின் புகைப்படம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

இலங்கை அரசாங்கப் படைகளாலும், துணை இராணுவ குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களாகிய நாங்கள், இந்த புனிதமான நாளில், உங்கள் அவசர கவனத்தையும் தீர்க்கமான நடவடிக்கையையும் கோரி மீண்டும் ஒருமுறை உங்களுக்கு கோரிக்கை முன்வைக்கிறோம்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம் | Missing Persons In North And East Letter To Geneva

வடக்கு மற்றும் கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் உறுப்பினர்களாக, இலங்கையின் வடகிழக்கில் தொடர்ந்து 3,000 நாட்களுக்கும் மேலாக நாங்கள் இடைவிடாமல் போராட்டம் நடத்தி வருகிறோம்.

எங்கள் கோரிக்கைகள் மாறாமல் உள்ளன, காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதி கிடைக்க ஒரு சர்வதேச நீதித்துறை பொறிமுறையை நிறுவுதல் மற்றும் எதிர்காலத்தில் காணாமல் போவதைத் தடுக்க சர்வதேச மேற்பார்வை தேவை என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

குத்துச்சண்டைப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதி

குத்துச்சண்டைப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாள் – 2025

உலகைப் பொறுத்தவரை, இது ஒரு நினைவுநாள். எங்களுக்கு, நீதி இல்லாமல் நினைவுகூருதல் நமது வலியை மேலும் ஆழப்படுத்துகிறது. இந்த நாள் வெறும் அடையாளமாக இருக்குமா அல்லது அது உண்மையான பொறுப்புக்கூறலுக்கு வலுசேர்க்குமா என்பதை சர்வதேச சமூகம் தீர்மானிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம் | Missing Persons In North And East Letter To Geneva

தமிழ் இனவழிப்பின் ஒரு கருவியாக வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, தமிழர்களுக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் இனவழிப்பின் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

1958 ஆம் ஆண்டு படுகொலைகள் முதல் 2009 ஆம் ஆண்டு போரின் கொடூரமான இறுதிக் கட்டங்கள் வரை, மற்றும் இன்று வரை தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு வரை, அதன் குற்றவாளிகளும் அதை இயக்கிய அடுத்தடுத்த வந்த இலங்கை அரசாங்க பொறிமுறைகளும் - கடத்தல், காணாமல் போதல் மற்றும் கொலை செய்தல் ஆகியவற்றிக்கு பொறுப்பு கூறாது தப்பித்தே வருகின்றன.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம் | Missing Persons In North And East Letter To Geneva

பெப்ரவரி 2017 இல் எமது தொடர் போரட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பதில்கள் இல்லாமல் இறந்துவிட்டனர்.

சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை மற்றும் அரசு முகவர்களின் துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்புகள் இருந்தபோதிலும், வடக்கு மற்றும் கிழக்கில் 3,000 நாட்களுக்கும் மேலான தொடர்ச்சியான இடைவிடாது போராடி வருகின்றோம்.

நாங்கள் தொடர்ந்து போராடுபவர்கள் மட்டுமல்ல - நாங்கள் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் என்பதால் நாங்கள் தொடர்ந்தும் மனவுறுதியுடன் போராடி வருகின்றோம். நாங்கள் தேடுவது உத்தரவாதங்களை அல்ல நடவடிக்கைளேயே.

மனிதப் புதைகுழிகளின் உரிமையாளர்கள் ரணிலும் ராஜபக்சர்களுமே.... அரச தரப்பு பகிரங்கம்

மனிதப் புதைகுழிகளின் உரிமையாளர்கள் ரணிலும் ராஜபக்சர்களுமே.... அரச தரப்பு பகிரங்கம்

2025 ஆம் ஆண்டில் புதிய சான்றுகள்: செம்மணிப் புதைகுழி

ஜூலை மற்றும் ஓகஸ்ட் 2025 க்கு இடையில், யாழ்ப்பாணத்தின் செம்மணியில் நடந்த புதைகுழி அகழ்வுகளின் போது இதுவரை 167 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் அடங்கும்.

அது மட்டும்மல்ல, சிறுவர்களின் பள்ளிப் பைகள் மற்றும் ஆடைகள் போன்ற தனிப்பட்ட உடமைகளுடன், பால் போத்தல்களும், பொம்மைகளும் கூட வெளி வருகின்றன. இவ்வாறே வடக்கு கிழக்கு எங்கிலும் பல மனித புதைகுழிகள் இருக்கும் என அஞ்சுகிறோம்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம் | Missing Persons In North And East Letter To Geneva

குறிப்பாக மிக பெருமளவில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும், 2009 முள்ளிவாய்க்காலிலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நிலை குறித்து மிகவும் அச்சமைடைகின்றோம்.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழிகளில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், புதைகுழிகளை அகழ்வது மட்டும் நீதியை வழங்காது.

குற்றவாளிகள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும். உள்நாட்டு வழிமுறைகள் தோல்வியடைந்துள்ளன என்பதை வரலாறு காட்டுகிறது.

கீழ் மட்ட வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட அரிதான நிகழ்வுகளில் பின்னர் அவர்கள் அரசியல் தலைவர்களால் மன்னிக்கப்பட்டனர் விடுதலையே செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் நீதியை அடைய முடியாது என்ற நமது நீண்டகால நிராகரிப்பை இது வலுப்படுத்துகிறது.

OMP மற்றும் உள்நாட்டு பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை

காணாமல் போனவர்கள் அலுவலகம் (OMP) பலவீனமானது, அரசியல்மயமாக்கப்பட்டது மற்றும் திறமையற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல வருட வாக்குறுதிகள் இருந்தபோதிலும், அது உண்மை அல்லது பொறுப்புக்கூறலை வழங்கவில்லை.

ஒரு அரசு தனது சொந்த குற்றங்களை நம்பகத்தன்மையுடன் விசாரிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழர்களின் இனப்படுகொலை - புதுப்பிக்கப்பட்ட அச்சங்கள்

போரின் இறுதி நாட்களில், சிறிலங்கா அரச படைகள் சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பான விடுதலையை உறுதியளித்தன. மாறாக, அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்.

இதில் பெண்கள், தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் அடக்கம். இன்று பல புதைகுழிகள் வெளிவரும் இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் தொடர்பான அச்சம் மேலும் வலுப்பெறுகின்றது.

உண்மையை வெளிக்கொண்டு வரவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவுமான நம்பகமான சர்வதேச பொறிமுறைக்கான எங்கள் கோரிக்கையை இது வலுப்படுத்துகிறது.

சர்வதேச சமூகத்தின் பங்கு

ஐ.நா. பணிக்குழுவின் முன் தீர்க்கப்படாத இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளை சிறிலங்கா கொண்டுள்ளது. இருப்பினும், அர்த்தமுள்ள UNHRC மேற்பார்வையை சிறிலங்கா அரசு தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றது.

உண்மை மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்தும் தடுத்து வருகின்றது. உள்நாட்டு செயல்முறைகள் தோல்வியடைந்துவிட்டன என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

ஒரு பாரபட்சமற்ற சர்வதேச பொறிமுறையால் மட்டுமே நீதி வழங்க முடியும். செப்டம்பர் 2025 UNHRC அமர்வு, கவலை வெளிப்பாடுகளுக்கு அப்பால் நகர்ந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம் | Missing Persons In North And East Letter To Geneva

ஐ.நா.வின் முன்னாள் உயர் ஆணையர் மிஷேல் பச்லெட்டின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான பரிந்துரைகளை மீண்டும் நாங்கள் நினைவுபடுத்துகின்றோம்.

இந்த பரிந்துரையை மேலும் 26 முன்னாள் ஆணையர்கள் ஆதரவு அளித்தனர். அவர்கள் ஐ.சி.சி பரிந்துரையுடன், இலக்கு வைக்கப்பட்ட தடைகள் மற்றும் நீதிக்கான நம்பகமான பாதைகளாக உலகளாவிய அதிகார வரம்பு ஆகியவற்றைக் கோரி இருந்தனர்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு, தண்டனையிலிருந்து விலக்கு மற்றும் நீதிக்கான தடைகள் ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

மனித உரிமைகள் கவுன்சிலால் நீதி பொறிமுறையை முன்னெடுக்க முடியாவிடத்து, இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனவழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் எங்கு சென்றாலும் நீதியை எதிர்கொள்வதை உறுதிசெய்ய உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்துமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சர்வதேச தினம் வெறும் அடையாளப்படுதலை தாண்டியதாக இருக்க வேண்டும். நீதியும் பொறுப்பு கூறலும் இல்லாதவிடத்து, இலங்கையில் இனவழிப்பும் அதன் சுழற்சியும் தொடரும். இந்த நாள் நினைவுகூருவதை விட செயல்பாடே அதிகமாக இருக்க வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்

இன்று மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025