வாக்களித்து விட்டு மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தலில் தமிழகம் தான் வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் களத்தை "தமிழக அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி" என்று அவர் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டு வந்த நிலையில், இன்றும் அதே கருத்தை முன்வைக்கும் விதமாக "தமிழகம் வெல்லும்" என்று அழுத்தமாகக் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
தமிழகத்தின் வெற்றி
ஜனநாயகக் கடமையை தான் ஆற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தமிழக மக்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
#WATCH | Tamil Nadu Elections 2026 | Along with his family, including Deputy CM Udhayanidhi Stalin, Tamil Nadu CM and DMK candidate from Kolathur, MK Stalin, arrives at a polling station in Chennai to cast his vote. pic.twitter.com/FZh9tUu5V7
— ANI (@ANI) April 23, 2026
செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது கையை உயர்த்திப் பிடித்தபடி தமிழகத்தின் வெற்றி பெறும் என அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் முதலமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |