மோடியின் இலங்கை விஜயம் : தள்ளி வைக்கப்பட்ட தமிழர் தரப்பு
இந்திய (India) பிரதமர் மோடி இலங்கைக்கு (Sri Lanka) வந்து சென்ற நிலையில், அவரது விஜயம் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை வாகன வாடகை இந்திய பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தின்போது, மோடியின் பாதுகாப்பு மட்டுமல்லாது இலங்கை வான்பரப்பும் இந்திய கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அது மட்டுமல்லாது தமிழ் கட்சி தலைவர்களை இந்திய பிரதமர் சந்தித்த நிலையில், அவர்களிடம் பேசுவதற்கு மிக சொற்ப நேரமே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது பௌத்த புனித இடங்களுக்கு மட்டுமே விஜயம் செய்ததுடன், தமிழர்களின் இடங்களுக்கு அவர் செல்லவில்லை என்பதுடன், இலங்கை அரசாங்கத்துடன் மோடி செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பான இன்னும் பல திடுக்கிடும் தகவல்களை ஆராய்கிறது இன்றைய “உண்மையின் தரிசனம்”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
