தாயகத்தில் தரையிறங்கும் மோடி - விரையவுள்ள மஹிந்த குழாம்
பிம்ஸ்டாக் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதியன்று பலாலி விமான நிலையத்துக்கு அவர்கள் வரவுள்ளனர்.
அவர்களை வரவேற்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.
பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது நாட்டின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருவதனை அண்மைக் கால செயற்பாடுகள் காட்டுகின்றன.
இதேவேளை மார்ச் 18ஆம் திகதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.