கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
போலி வட்ஸ்அப் குழு ஒன்று தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் விடுத்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி பேரவை என்ற பெயரில் செயல்படும் ஒரு மோசடி வட்ஸ்அப் குழு குறித்து இந்ந எச்சரிக்கை விடுக்கப்டப்டுள்ளது.
கல்வி அமைச்சு
இந்தநிலையில், கல்வி மண்டலங்கள் முழுவதும் ஆசிரியர்களை ஒன்றிணைப்பதாக இந்தக் குழு அறிவுருத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், எந்த வகையிலும் இந்த குழு அமைச்சுடன் இணைக்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீர்திருத்த முயற்சி
அத்தோடு, இந்த தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தகவல் தொடர்புகள் அல்லது செயல்பாடுகளுக்கும் அமைச்சு பொறுப்பேற்காது என அறிவுருத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்த முயற்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் குழுக்களால், தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்குமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்