அமைச்சர்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு திருப்பிவிட்ட மஹிந்த
corona
sri lanka
money
mahinda rajapaksha
By Shalini
அமைச்சரவை அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ய அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் கொரோனா நிதியத்தை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சர்கள் பலரும் தங்களின் சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு வழங்குமாறு அமைச்சு செயலாருக்கு கடிதம் மூலம் நேற்று அறிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி