இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை கண்டறிவு
இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆபிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது.
இதன் காரணமாக உலகின் பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அயல் நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம், முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது.
தென்கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு
அங்கு ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை 15 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு, தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி

