மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ். மாணவன் கடலில் மூழ்கி பலி
கொழும்பு - மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாண மாணவன் ஒருவர் கடலில் நீராட சென்ற நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (19.04.2026) இடம்பெற்றுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய கதிர்காமநாதன் மிதுசன் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பெந்தோட்டை கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் பொழுது போக்கிற்காகச் சென்ற குறித்த மாணவன், கடலில் நீந்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட மாணவனை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |