மின்சாரக் கட்டணத்தின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க முயற்சி
90 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணத்தை குறைப்பதில் அதிக நன்மைகள் கிடைக்கும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர்நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நேற்றைய தினம் (12) மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
மின்சாரக் கட்டணம்
இந்நிலையில், மின்சாரக் கட்டணத்தின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன், மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் மின்சார வாரியம் லாபத்தை பராமரிக்க முடியாது, மின் உற்பத்திக்காக செலவழித்த தொகையை மட்டுமே வசூலிக்க முடியும்.
எனவே, 0-30, 0-60 மற்றும் 0-90 அலகுகளுக்கு இடைப்பட்ட குறைந்த மட்ட பாவனையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
22 மணி நேரம் முன் 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        