இலங்கையை நாடும் இந்தியர்கள்: குவியும் சுற்றுலாப்பயணிகள்
இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் 27 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 703 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் இருந்து 27 ஆயிரத்து 281 பேரும், ரஷ்யாவில் இருந்து 22 ஆயிரத்து 382 பேரும், ஜேர்மனியில் இருந்து 11 ஆயிரத்து 680 பேரும் மற்றையவர்கள் ஏனைய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
கேபிள் கார் திட்டம்
இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 12 இலட்சத்து 63 ஆயிரத்து 158 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதை ஊக்குவிக்கும் வகையில், அம்புலுவாவ மலை உச்சியை அடைவதற்காக பல்கலாச்சார பல்லுயிர் வளாக கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை முதலீட்டுச் சபையானது இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது.
அம்புலுவாவ பல்கலாச்சார மையம் எம்பர் அட்வென்ச்சர்ஸ் இலங்கை நிறுவனம் மற்றும் சீன முதலீட்டாளர்கள் பங்கு உரிமையுடன் 4.5 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்