ஆபத்தான இடமாக மாறும் கட்டுநாயக்க! 3,500க்கு அதிகமானோர் கண்டுபிடிப்பு
corona
wattala
gampaha
katunayaka
By Shalini
கட்டுநாயக்க பகுதியில் இன்று 43 பேருக்கு கொரோனா நோய் தொற்று பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் நலின் ஆரியரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, கட்டுநாயக்க சீதுவ சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவில் இன்று, 24 கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன.
இன்றுவரை, இப்பகுதியில் 3,741 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் 19 ஊழியர்கள் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 73 தொழிற்சாலைகளில் 3,529 ஊழியர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி