உக்ரைனின் அதிரடிப் பதில் தாக்குதல்: மொஸ்கோவில் முடக்கப்பட்ட விமான சேவை
மொஸ்கோவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் ஓயவில்லை.
திடீர் தாக்குதல்
இந்தநிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

போரை நிறுத்த அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் இரு நாடுகள் இடையேயான தாக்குதல் ஓயவில்லை.
இந்நிலையில், உக்ரைனின் வடக்குப் பகுதியில் ரஷ்ய இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்த அதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
பதில் நடவடிக்கை
இதைத் தொடர்ந்து பதில் நடவடிக்கையில் இறங்கிய உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் மொஸ்கோ மீது ட்ரோன்களை வீசித் தாக்குதலைத் தொடர்ந்தது.
இதையடுத்து, டோமோடெட்வோ, நுயுகோவா (Vnukovo), ஜூகோவ்ஸ்கி மற்றும் செர்மெட்யோவா ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களிலும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, பாதுகாப்பு காரணமாக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |