பரிதாபமாக பலியான சிறுவன்: பெற்றோர் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பகுதியில் 8 வயது சிறுவன் தீப்பிடித்து இறந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாய், தந்தை மற்றும் தாயுடன் சட்டவிரோதமுறையில் தொடர்பில் இருந்தவர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று(10) பலாங்கொடை பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெதி முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு பாதுகாப்பு மற்றும் அரவணைப்பை வழங்காமல் அலட்சியமாக செயற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாய் மற்றும் தந்தையை நீதவான் விளக்கமறியலில் உத்தரவிட்டுள்ளார்.
இறுதி சடங்கு
அத்தோடு, தாயுடன் சட்டவிரோதமுறையில் தொடர்பில் இருந்தவருக்கு பல பிடியாணைகள் ஏற்கனவே இருந்த நிலையில், அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் உடலின் பிரேத பரிசோதனை பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்டு, இறுதி சடங்குகளுக்காக உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
