இரு பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு
புதிய இணைப்பு
எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாய் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிபிட்டிய - சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இரு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் வாவியில் குதித்த சம்பவம் எம்பிலிபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ள நிலையில், எம்பிலிபிட்டிய காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட 32 வயதான தாயும், 11 வயதான மகனும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அவர்களில் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகனின் உடல்நிலை ஆபத்தானதாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எம்பிலிபிட்டிய - சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ளவே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இதற்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.