நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய மாதச் சம்பளம்! சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனாவின் அறிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அவர் தனது சம்பளப் பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அர்ச்சுனா பகிர்ந்த ஆவணத்தின்படி, அவரது சம்பளத்தில் எரிபொருள் கொடுப்பனவானது 1,79,000லிருந்து 2,44,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு
சம்பளப் பட்டியலுடன் இணைக்கப்பட்ட ஒரு முகநூல் பதிவில், கூறப்படும் இந்த அதிகரிப்பு குறித்து அர்ச்சுனா பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இதே போன்ற தொகை 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பெருக்கப்பட்டு பெலவத்தையில் உள்ள வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"உண்மையைப் பேசுபவர்களைக் கைதட்டி மூச்சுத்திணறச் செய்யுங்கள்," என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையையும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 60,000 உயர்த்தப்பட்டுள்ளதாக நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்த அர்ச்சுனா ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய மாதாந்த சம்பளம் 4,84,000 ரூபாய் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |