நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வாகன விபத்துக்களில் மூவர் பலி
மாத்தளை (Matale) ஏ - 06 வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குருநாகலையில் இருந்து தம்புள்ளை (Dambulla) நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
லக்கல மற்றும் மாத்தளை பிரதேசத்தில் வசித்து வந்த 29 மற்றும் 40 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவர் உயிரிழப்பு
குறித்த விபத்தானது மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதித் தடுப்பில் மோதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதாகவும் பின்னால் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மற்றுமொரு விபத்து
இதேவேளை, குருநாகல் (Kurunegala) - புத்தளம் (Puttalam) வீதியின் கெலிமுனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாரியபொல காலவ்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 4 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)