மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்ற தந்தைக்கும், மகனுக்கும் நேர்ந்த துயரம்
Puttalam
Accident
Death
By Jaso
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் மின் கம்பத்தில் மோதியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கல்பிட்டிய காவல்தறையினர் தெரிவித்தனர்
மகனுடன் தேவையான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வர சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்பு
அவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாததால், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே அவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கல்பிட்டிய காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவர்கள் மீனவரான துஷ்மந்த ரோஹன மற்றும் அவரது ஆறு வயது பாடசாலை மாணவனான ரவீன் கனிஷ்கா ஆவர். அந்தச் சிறுவன் கந்தகுலியாவில் உள்ள புனித செபாஸ்டியன் பாடசாலையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்